Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு

டிசம்பர் 17, 2019 10:54

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய பல்கலைகழகம் மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துடன் இயங்குகிறது. புதிதாக மற்றொரு பல்கலை கழகத்தை தொடங்க தமிழக அரசு திட்டம் நிறைவேற்றியுள்ளது. சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது. அக்கடிதத்தில், ''அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும். 

அதே நேரத்தில் தமிழக அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. அதேபோல, மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கவேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்